
“குடியாத்தத்தில் 90% அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றனர். அங்குள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம் கட்டித்தர வேண்டும்” என தவெக எம்எல்ஏ சிந்து கோரிக்கை வைக்க, அவருக்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, வேறு ஒரு டேட்டா ஒன்றை வாசிக்கத் தொடங்கினார். அதன் பின் அதை புரிந்து கொண்ட அவர், பதிலளிக்க சிரமப்பட்ட போது, “கோரிக்கையை குறிப்பெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு,” சபாநாயகர் அறிவுறுத்தினார்