
கடலூர் மாவட்டம் விசூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மது போதைக்கு அடிமையாகி தனது தந்தை சிவமுருகனிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்கடேசன் அரிவாளால் வெட்டியதில் தந்தை சிவமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசனைக் கைது செய்து, பின்னர் உயிரிழந்த சிவமுருகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

