த
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த ராஜா(25) இவர் FQL ஆன்லைன் செயலி வழியாக கிரிப்டோ கரன்சி மூலம் பணம் கட்டி ஏமாந்த நிலையில் ராஜா மன உளைச்சலில் காசம்பட்டியில் தோட்டத்து பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ராஜாவின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், வசந்த்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
