கோக்கு மாக்கு

அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்

கோபிசெட்டிபாளையம்
சட்ட மன்ற தொகுதியில் பல்வேறு பயனாளிகளுக்கு பட்டா,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வருவாய்துறை ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர்.

13 லட்சத்து 84 ஆயிரம் பேர் இது வரை புதிதாக அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர்.

செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை

இந்த ஆண்டு 238 மையங்களில் 1.17,990 மாணவர்கள் நீட் தேர்வை எழுதவுள்ளனர்.

வரும் 5 தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை வந்தால் தகவல் தெரிவிக்கிறேன்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது

என்று தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button