
அடுத்த தலைமுறை ‘E10 ஷின்கான்சென்’ (E10 Shinkansen) ரயில்களின் உருவாக்கம் நிறைவடைந்ததும், 2030-களின் தொடக்கத்தில் ஜப்பான் அவற்றை வழங்கும்.
கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், இத்தடத்தின் முதல் பகுதி 2027-இல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
E10 ரயில்கள் தயாராகும் வரை, இத்திட்டத்தை மிக விரைவில் தொடங்கி செயல்படுத்தும் நோக்கில், இந்திய அதிவேக ரயில்களைக் கொண்டு சேவையைத் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

