செய்திகள்

மர குடோனில் பயங்கர தீ விபத்து : ரூ.1.5 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள், அறுவை இயந்திரங்கள் தீயில் கருகி சேதம்

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பேட்டை சாலையில் உள்ள தனியார் அறுவை மில் அருகே செயல்பட்டு வந்த முருகன் என்பவரின் மர குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, கணநேரத்தில் தேக்கு மரங்கள் மற்றும் குடோன் முழுவதும் பரவியது. இது குறித்த தகவலின் பேரில், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள், அறுவை இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button