திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பேட்டை சாலையில் உள்ள தனியார் அறுவை மில் அருகே செயல்பட்டு வந்த முருகன் என்பவரின் மர குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, கணநேரத்தில் தேக்கு மரங்கள் மற்றும் குடோன் முழுவதும் பரவியது. இது குறித்த தகவலின் பேரில், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள், அறுவை இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read Next
2 days ago
கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் படகுடன் மீட்பு
3 days ago
இந்தியாவில் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்
3 days ago
பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா நிறைவேற்றம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி
3 days ago
பிராட்வேயில் GST அதிகாரிகள் சிறைபிடிப்பு: பாத்திரக்கடை வியாபாரிகள் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு
3 days ago
தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக மாறும் அமராவதி நகரம்
3 days ago
காங்கிரஸ் எம்.பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
4 days ago
தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிறப்பு திட்டம் – அமைச்சர் கீர்த்தனா தகவல்
5 days ago
காவிரி நீர் விவகாரம் – வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
6 days ago
எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்
6 days ago
பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
Related Articles
Check Also
Close



