
நாட்றம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சாகசம் செய்ய முயன்ற போது, நிலை தடுமாறி கிழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அஸ்வின் என்பவர் தனது நண்பர் அபியுடன் இருசக்கர வாகனத்தில் டோல்கேட் பகுதியில் இருந்து நாட்றம்பள்ளி பேருந்து நிலையம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஏறிகொடி பகுதியில் வந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் இருவரும் கீழே விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


