கன்னியாகுமரி மாவட்டம் – அருமனை அருகே மேல்புறம் பகுதியில் கணேசன் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார்.
2022 டிசம்பர் 10-ம் தேதி பைக்கில் ஜோடியாக வந்த இருவரில், ஒரு பெண் பழம் வாங்குவது போல் நடித்து கணேசனின் மனைவி கிறிஸ்டினாவிடம் இருந்து 6.5 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.
சம்பவ இடத்தில் தவறவிட்ட செருப்பு மற்றும் சிசிடிவி காட்சி மூலம், குற்றவாளி கேரள மாநிலம் வெள்ளறடை அலம்பாறையைச் சேர்ந்த சாந்தகுமாரி (44) என்பது தெரியவந்தது.
பைக் ஓட்டி வந்த சதீஷ் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் 2023 ஜனவரி 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த குழித்துறை நீதிமன்ற நீதிபதி சுசின்குமார், சாந்தகுமாரிக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பைக் ஓட்டி வந்த சதீஷை விடுதலை செய்தார்.
சுங்கச்சாவடி கட்டணம் தர மறுத்து சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய தவெக நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது
2 days ago
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா- நள்ளிரவில் நடைபெற்ற உருண்டை சோறுடன் கூடிய கிடாக்கறி விருந்து. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
2 days ago
கிருஷ்ணகிரி; 21 டன் குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு – போதை பொருள் விற்பனை செய்யும் கடைகள் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
2 days ago
ஹைதராபாத்; மதுபோதையில் தவறான பாதையில் வந்த கார் மோதி ராணுவ வீரர் பலி
2 days ago
வியாசர்பாடி; மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனுக்கு வலை