
திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றது. இதனைத்தொடர்ந்து பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான சாலை என்பதால் சாலையின் நடுவே நின்ற அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நடத்துனர் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை தள்ளி சாலையில் ஓரம் நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
