செய்திகள்

“அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு!” – போலீசிடம் போட்டுக்கொடுத்த 6 வயது சிறுவன்

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணங்கள் இல்லாததால் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள வீட்டில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. சுரேஷின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அவரது 6 வயது மகன் மகேந்திரா, “நீங்க வர்றீங்கனுதான் அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு” எனக் கூறியதுடன், இருசக்கர வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தையும் போலீசாரிடம் காட்டி கொடுத்துள்ளார். சிறுவனின் கள்ளம் கபடமற்ற பேச்சால் போலீசாரும் அங்கிருந்தவர்களும் சிரித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button