
நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பல ஆண்டுகள் நடைபெற உள்ள இந்த ஆய்வுப் பயணத்தின் மூலம் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரப்பை வரைபடமாக உருவாக்கி விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. மேலும், பிரபஞ்சத்தின் விரிவாக்கம், இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பொருள் உள்ளிட்ட முக்கிய மர்மங்களை ஆராய இந்த தொலைநோக்கி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த மனிதர்களின் புரிதலை இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

