திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதிக்கு அருகே இன்று பிற்பகல் பழனிச்சாமியின் மனைவி அஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவருடன் சென்றிருந்த உறவினர்களின் குழந்தைகள் சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் ஏற்றிச் சென்ற வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நாகராஜின் மகள்களான யோகவர்ஷினி, அனன்யா, தனுஸ்ரீ, மோசிகரன் ஆகிய 4 குழந்தைகளும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த குழந்தைகளுடன் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள், விபத்தின் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய பால் வேன் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 4 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய பால் வேனை போலீசார் பறிமுதல் செய்ததுடன், தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பிஞ்சு குழந்தைகள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read Next
2 hours ago
சிவகாசி : இயேசு கிறிஸ்து சிலை உடைப்பு – கிறிஸ்தவர்கள் சாலை மறியல்
8 hours ago
தூத்துக்குடி : ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை
1 day ago
தூத்துக்குடி : மீன்கள் வரத்து அதிகரிப்பு – விலை குறைவு
1 day ago
தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் – என்.ஆர். தனபாலன்
2 days ago
பைனான்ஸ் நிறுவன அதிகாரி மிரட்டியதில் கார்பெண்டர் தூக்கிட்டு தற்கொலை
2 days ago
ஆந்திரா : ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38,379 மது பாட்டில்கள் அழிப்பு
2 days ago
தென்காசி : சிறுமியின் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு – நேரில் சென்று பாராட்டிய திமுக மாவட்ட செயலாளர்
2 days ago
குற்றாலம் : மேலிடப் பார்வையாளர்கள் முன்பே பதவிக்காக மோதிக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்
2 days ago
திருவண்ணாமலை : கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
2 days ago
டிராமா மன்றமாகி விடக்கூடாது – அண்ணாமலை பேட்டி
Related Articles
Check Also
Close
-
விசில் செய்தியாளரின் மனித நேயம் மனதை உருக்கும் செயல்December 6, 2021


