கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் பவானியில் திமுக மற்றும் பாமக கட்சிகளில் மாநில பொறுப்பு வகித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் அக்கட்சியினர்அதிர்ச்சியில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி ராயல் தியேட்டர் ரோட்டில் வசித்து வந்தவர் பி.ஆர்.எஸ். என்ற ரங்கசாமி. இவர் திமுகவில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பதவி வகித்து வந்தார். சிறுவயது முதலே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்படியாக வளர்ந்து உயர்ந்த பதவி வகித்தார். இவர் கடந்த மாதம் 18-ம் தேதி உடல் நலக் குறைவால் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இந்நிலையில் பவானி அருகிலுள்ள அம்மாபேட்டை, ஆனந்தம் பாளையம் பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னால் மாநில துணை பொது செயலாளராக பதவி வகித்தார்.

தற்போது ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கொரானா நோய்த்தொற்று ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுமார் 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உயிரிழந்துள்ளது அரசியல் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானி
செய்தியாளர் ஜி. கண்ணன்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button