
சங்கரன்கோவில் நகராட்சி அதிநவீன கட்டண கழிப்பிடம் பேருந்து நிலையத்தின் உள்ளே ஒன்று உள்ளது .
அங்கு உள்ள ஒப்பந்ததாரர் பொது மக்களிடம் கட்டணமாக பத்து ரூபாய் வசூலித்து வருவதாகவும் இது குறித்து கேள்வி எழுப்புபவர்களை மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இன்று ( 18/04/2026 ) மாலை சமூக ஆர்வலர் ஒருவர் இங்கு சென்ற போது அவரிடத்திலும் அதே அடாவடி செய்ய அவர் சங்கன் கோவில் நகராட்சி ஆணையரிடம் புகார் அளிப்பேன் என கூற யாரிடம் வேண்டுமானாலும் கூறு என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறியது மட்டுமல்லு ஆதாரம் கேட்டால் எனது GPay -யில் பணம் அனுப்பிவிட்டு அதை அவர்களிடம் கட்டு என கூறியுள்ளார்.
நகராட்சி ஆணையருக்கு அலைபேசி வாயிலாக புகாரளிக்க அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை என Gpay -ல் பணம் அனுப்பியதுடன் சேர்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்