
திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான இடத்தை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்தில் தீர்மான நகல்களை தமிழக முதலமைச்சருக்கு கொடுக்கப்பட உள்ளதாகவும் இதனை மீறி பேருந்து நிலையம் அமைக்கும் பட்சத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
