செய்திகள்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு; விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலக்காலணி பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் விவசாய வேலைக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வேகமாக வந்த டாடா ஏசி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தை ஏற்படுத்திய டாடா ஏசி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button