
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும், தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தமிழக வெற்றிக் கழக ஆட்சி 100 நாட்களில் மக்களுக்கான எந்த முக்கிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.


