க்ரைம்

திருச்சி : ரயிலில் மொபைல் போன் திருடிய நபர் கைது

துாத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் அற்புதராஜ். இவர், சென்னையில் தன் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, அந்தியோதயா ரயிலில் ஊருக்கு திரும்பினார். அப்போது நள்ளிரவு தன் மொபைல்போனை ரயிலில் சார்ஜ் போட்டு விட்டு, அற்புதராஜ் துாங்கி விட்டார். திருச்சி அருகே எழுந்து பார்த்தபோது, மொபைல்போன் காணாமல் போயிருந்தது.

இந்நிலையில், அற்புதராஜ், திருச்சி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையியல் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த யூடியூபர் சாதிக்பாட்ஷா என்பவர், மொபைல் போனை திருடியது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button