சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் கார் மெக்கானிக் வேலையை செய்து வருகிறார். இவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வாகனத்தை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் அபதாரம் செலுத்தினால் வாகனத்தை பெற்று கொள்ளலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, சக்திவேல் ரூ. 10000 போலீசாரிடம் வழங்கியுள்ளார். இருப்பினும் போலீசார் அந்த வாகனத்தின் மீது ரூ.15 ஆயிரம் அபராதம் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கேட்டபோது, மேலும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் வழக்கை முடித்து தருவதாக செல்வகுமார் தெரிவித்ததாகவும் சக்திவேல் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் தொடர்பாகவும் முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் பணத்தை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேல் கோரிக்கை வைத்துள்ளார்.
Read Next
செய்திகள்
11 hours ago
தூத்துக்குடி FCI குடோனில் திடீர் தீ விபத்து
9 hours ago
ஊட்டி : குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க கோரி விழிப்புணர்வு
9 hours ago
திருநெல்வேலி : தனியார் பேருந்து மோதி இருவர் பலி
10 hours ago
குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இடமாற்றத்தால் உற்சாகமடைந்த கனிம வள கும்பல்
11 hours ago
தூத்துக்குடி FCI குடோனில் திடீர் தீ விபத்து
11 hours ago
தூத்துக்குடி : மதுபான கடைகளில் அலைமோதிய கூட்டம் – ஊழியர்கள் குற்றச்சாட்டு
12 hours ago
பிரியாணி பேனரில் விநாயகர் படம் இருப்பதால் புகார் – கடை உரிமையாளர் கைது
1 day ago
இந்தோனேசியா : ஜாவா கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்து – 140 பேர் மாயம்
1 day ago
புதுச்சேரி : பாதுகாவலர்களைத் தாக்கிய சுற்றுலாப் பயணிகள்
1 day ago
தென்காசி அருகே ஆற்றில் கவிழ்ந்த அரசு பேருந்து – 17 பேர் காயம்
1 day ago
ராமநாதபுரம் : அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்
Related Articles
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – 80 லட்ச ரூபாய் பறிமுதல்
April 13, 2024
Check Also
Close
-
போர்கால அடிபடையில் மாவட்டநிர்வாகம்..November 18, 2020

