
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அய்யாபட்டியில் உள்ள தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் சுமார் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் ஆண் புள்ளி மான் தவறி விழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மானைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மான் அழகர்கோவில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடப்பட்டது.