க்ரைம்

காஞ்சிபுரம் : விடுதியில் மாணவி உயிரிழப்பு – மாணவர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வருபவர் நிகிதா. இவர், பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் போது மாணவி தற்கொலைக்கு முன்பு கைப்பட எழுதி இருக்கும் கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதற்கு விடுதி காப்பாளரின் கண்காணிப்பு குறைபாடு தான், மாணவி மரணத்திற்கு காரணம் எனக்கூறி 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button