திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் அவிநாசிமணி இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர் கரிக்காலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ந்தேதி கோமுட்டிப்பட்டி பகுதியில் மக்கள் கணக்கெடுப்பு பணியை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் மொபட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது , குஜிலியம்பாறை–கரிக்காலி சாலை ரெயில்வே பாலம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் அவரது தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார் . அப்போது அங்கு பொதுமக்கள் வந்ததால், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார் . இதுகுறித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்
