க்ரைம்

கோவை : தலையில் காயத்துடன் வடமாநில நபர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் சிங்​காநல்​லூரை சேர்ந்​தவர் குரு​நாதன். இவருக்கு சொந்த​மாக பாப்​பம்​பட்டி நந்​தினி நகரில் உள்ள இடத்​தில், தகரக்கொட்​டகை அமைக்​கும் பணியை கடந்த சில நாட்​களாக மேற்​கொண்டு வந்​தார். நேற்று இடத்தை பார்​வை​யிட சென்றபோது, அங்கு ஒருவர் தலையில் காயம்​பட்ட நிலை​யில் உயி​ரிழந்து கிடந்​தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்​பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இறந்து கிடந்​தவரின் கையில் ராமேஸ்வர் என்று பச்சை குத்தப்பட்டு வட மாநிலத்​தவரை போல காணப்​படும் அவரை மர்ம நபர்கள் கொலை செய்​துள்​ள​தாக போலீசார் தெரிவித்​தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button