க்ரைம்

உ. பி; சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துர்நாற்றம் மற்றும் ரத்தம் போன்ற திரவம் வெளியேறியதை கவனித்த பயணி அளித்த தகவலின் பேரில், ஜி.ஆர்.பி. மற்றும் ஆர்.பி.எப். அதிகாரிகள் சூட்கேஸை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சூட்கேஸில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையின் கவர்கள் மற்றும் பில்கள் இருந்தது. எனவே அது சென்னையில் இருந்து ரயிலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச ஜி.ஆர்.பி. அதிகாரிகள் சிறப்பு குழுவாக சென்னை வந்து, தமிழ்நாடு போலீசாருடன் இணைந்து ரயில் நிலைய சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே உயிரிழந்தவர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button