உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துர்நாற்றம் மற்றும் ரத்தம் போன்ற திரவம் வெளியேறியதை கவனித்த பயணி அளித்த தகவலின் பேரில், ஜி.ஆர்.பி. மற்றும் ஆர்.பி.எப். அதிகாரிகள் சூட்கேஸை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சூட்கேஸில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையின் கவர்கள் மற்றும் பில்கள் இருந்தது. எனவே அது சென்னையில் இருந்து ரயிலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச ஜி.ஆர்.பி. அதிகாரிகள் சிறப்பு குழுவாக சென்னை வந்து, தமிழ்நாடு போலீசாருடன் இணைந்து ரயில் நிலைய சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே உயிரிழந்தவர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read Next
21 hours ago
நாடு வழியில் நின்ற அரசு பேருந்து – பேருந்தை தள்ளி போக்குவரத்தை சரி செய்த சிங்கபெண்படை
1 day ago
தூத்துக்குடியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
1 day ago
திருப்பூரில் லாபம் தருவதாகக் கூறி ரூ. 500 கோடி பண மோசடி – இருவர் தலைமறைவு
1 day ago
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
1 day ago
அணை மீன் விற்பனை மையத்தில் முறைகேடு – பொதுமக்களைப் புறக்கணித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு!
2 days ago
போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 வாலிபர்கள் கைது – 725 போதை மாத்திரைகள் பறிமுதல்
2 days ago
விவசாய பயன்பாட்டுக்கு மண் எடுக்க சொன்னா கிணறு தோண்டிய மணல் மாபியா
2 days ago
கொட்டி எரிக்கப்படும் கோழி கழிவுகள் – பாதிக்கப்படும் நீர்நிலை
2 days ago
ரூ.100 கோடி சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நிபந்தனையுடன் அனுமதி
2 days ago
காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு
Related Articles
போதை மாத்திரைகள் விற்பனை – 4 பேர் கைது
May 17, 2024
Check Also
Close
