
தமிழ்நாடு: முதுமலை புலிகள் காப்பகத்தில் 48 வயது பெண் யானை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீசூர் வனச்சரகம், சீசூர் பிரிவு, சீசூர் காப்புக்காட்டின் ஆனைக்கட்டி தெற்கு காவல் பகுதிக்கு உட்பட்ட தனக்கடவு பகுதியில் 48 வயதுடைய பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
07.08.2026 அன்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பணியாளர், பிற்பகல் 3.05 மணியளவில் யானை உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டறிந்தனர்

