க்ரைம்
Trending

வனத்துறையின் சார்பில், கரடிகள் நடமாட்டம் மற்றும் அதன் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

முதுமலை புலிகள் காப்பகம், உதகமண்டலம் வனக்கோட்டம், முக்குருத்தி வனச்சரகம் சார்பில், குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட கீழ்குந்தா என்ற கிராமத்தில், இன்று 18.09.2026 ஆம் தேதியன்று, வனத்துறையின் சார்பில், கரடிகள் நடமாட்டம் மற்றும் அதன் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கீழ்குந்தா, மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

முதுமலை புலிகள் காப்பக கள் இயக்குனர் திரு.R.கிருபாசங்கர் IFS அவர்களது உத்தரவின்படியும், உதகை வனக்கோட்ட துணை இயக்குனர் (பொறுப்பு) திரு.R.வித்யாதர் IFS அவர்களது வழிகாட்டுதலின்படியும்,இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முக்குருத்தி வனச்சரக அலுவலர் திரு.செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் குந்தா வனச்சரக அலுவலர் திரு.சரவணன் தலைமையிலான வனக்குழுவினர், விவசாயிகள் & பொதுமக்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட, உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரினப் பிரிவு விரிவுரையாளர் மற்றும் துறைத் தலைவர் முனைவர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வீடியோக்கள், ஸ்லைடுகள் ஆகிவற்றை காண்பித்து, கரடிகள் தொடர்பான பிரச்சனைகள், அதன் பழக்க வழக்கங்கள், மனித-வன விலங்கு மோதலை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியன குறித்து விளக்கம் அளித்தார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் நடத்தியதற்காக. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வனத்துறைக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button